web log free
June 05, 2023

இலங்கையில் உள்ள அறுபது லட்சம் பேருக்கு உணவு இல்லை- ஐநா அறிக்கை

இலங்கையில் உள்ள ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமது அடுத்த உணவு தொடர்பில் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை காட்டுகிறது.
அறிக்கையின்படி, 6.26 மில்லியன் இலங்கையர்கள் அல்லது ஒவ்வொரு 10 குடும்பங்களில் மூன்று பேர் தங்களுக்கு அடுத்த உணவு கிடைக்குமா என்ற சந்தேகத்தில் உள்ளனர்.
உணவுப் பணவீக்கம் பாரியளவில் அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் 61% பேர் ஏற்கனவே உணவு உட்கொள்வதைக் குறைத்து, சத்தான உணவை உட்கொள்வதைக் குறைத்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

அறிக்கையின்படி, சுமார் 200,000 குடும்பங்கள் தற்போது ஆபத்தில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்