web log free
May 01, 2025

சார்ஜன்ட் ஒருவரை தாக்கி கழுத்திலிருந்த தங்க நகையை உடைத்துக்கொண்டுஓட்டம்

கண்டி தலைமையக பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தாக்கி கழுத்திலிருந்த தங்க நகையை உடைத்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கடுகன்னாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருடப்பட்ட நகையின் பெறுமதி சுமார் இரண்டு இலட்சம் ரூபா எனவும் சந்தேகநபர் முச்சக்கர வண்டி சாரதி எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் சார்ஜன்ட் தனது மனைவியுடன் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது, ​​பயணக் கட்டணம் தொடர்பான வாக்குவாதத்தில் முச்சக்கரவண்டி சாரதி பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கி அவரது தங்கச் சங்கிலியை உடைத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd