web log free
April 19, 2024

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு பாராளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு...

எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடக அறிக்கையை வெளியிடும் போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜூலை 15 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டி ஜனாதிபதி பதவி வெற்றிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஜூலை 19 ஆம் திகதி வேட்புமனுக்களை கோருவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.