web log free
April 24, 2024

வெளிநாடு செல்லசென்ற ஜனாதிபதி விமான நிலையத்தில் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இன்று நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டை முத்திரையிட மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இதனையடுத்து, ஜனாதிபதியும் அவரது மனைவியும் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாமில் இரவைக் கழித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


விஐபி முனையத்தினூடாக பயணிகளை வெளியேறுமாறு குடிவரவு அதிகாரிகள் முத்திரையிட மறுத்துள்ளதாகவும், ஆனால் சாதாரண விமானப் பயணத்திற்கு பயணிகள் முனையத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் இருந்தாலும் எதிர்ப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி அவர்களுக்குத் தெரிவித்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.