web log free
April 30, 2025

ஆசையை நிறைவேற்றச் சென்று குழந்தை முதலைக்கு பலி

தம்புள்ளை கந்தளம கும்பக்கடன்வல குளத்தில் தாய் மற்றும் தந்தையுடன் நீரில் நீந்திக் கொண்டிருந்த 7 வயது குழந்தையொன்றை முதலை பிடித்து இழுத்துச் சென்றுள்ளதாக சீகிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முதலையால் பிடித்துச் செல்லப்பட்ட குழந்தையைக் கண்டுபிடிக்க உயிர்காப்புப் படையினர், கிராமப் பணியாளர்கள்  நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கும்புக்கடன்வல பிரதேசத்தை சேர்ந்த தம்புள்ளை கண்டலம டி.எஸ்.சேனநாயக்க வித்தியாலயத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் சனுத் சத்சர என்ற சிறு குழந்தையே முதலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த ஏரியில் முதலைகள் இருப்பதால் பலர் குளிப்பதில்லை என குழந்தையின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

பல நாட்களாக, தங்கள் மகன் இந்த ஏரியில் குளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு வந்ததால், குழந்தையின் ஆசையை நிறைவேற்ற குடும்பத்தார் அனைவரும் முதல் முறையாக இந்த ஏரியில் குளிக்க வந்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd