web log free
July 09, 2025

மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவிகளை நிர்வாண புகைப்படம் எடுத்த ஆசிரியர் கைது

உயர்தர தனியார் வகுப்புகளில் கலந்து கொண்ட நான்கு மாணவிகளை நிர்வாண புகைப்படம் எடுத்த சம்பவம் தொடர்பில், தனியார் வகுப்புகளை நடத்தும் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்குரிய ஆசிரியர் ரம்பொடகல்ல மற்றும் மாவத்தகம பிரதேசங்களில் தனியார் வகுப்புகளை நடத்தி வருவதாகவும் சந்தேக நபர் பாடசாலை ஆசிரியர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நான்கு மாணவிகளையும் காரில் ஏற்றிச் சென்று காரை நிறுத்திவிட்டு மேலும் கற்றுக்கொடுக்கப் போவதாகக் கூறி பின்வரும் புகைப்படங்களை எடுத்ததாக நான்கு மாணவிகளும் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் அந்த நபரின் செல்போனை சோதனையிட்டபோது, ​​அதில் நான்கு மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள் பதிவாகியிருந்ததாகவும் பொலீசார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd