web log free
April 30, 2025

டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிப்போம் என பகிரங்கமாக கூறியவர்கள் கூட அவ்வாறு செய்ததாக தெரியவில்லை-வாசுதேவ நாணயக்கா

டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிப்போம் என பகிரங்கமாக கூறியவர்கள் கூட அவ்வாறு செய்ததாக தெரியவில்லை எனவும், அவர்கள் ஏமாற்றப்பட்டதாக சந்தேகம் இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று (20) இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும் எதிர்காலத்தில் கொள்கை அடிப்படையில் அரசியல் அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சஜித் பிரேமதாசவின் எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாடு குறித்தும் கேள்வி எழலாம் எனவும் திரு நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd