web log free
April 30, 2025

மனோ, ராதா, திகா, ஜீவன், ரிசாத் ஆகியோர் அடங்கிய அமைச்சரவை விரைவில்..!

சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான கட்சிகள் மற்றும் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிரந்தர அமைச்சரவையொன்று எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, சமகி ஜன பலவேகய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாகவும் றிசாத் பதியுதீனின் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்த புதிய அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அதற்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்தக் கட்சிகளையும் குழுக்களையும் அழைத்து பேசுவார் என அறியப்படுகிறது.

புதிய அமைச்சரவையில் 20 முதல் 37 அமைச்சர்கள் இருப்பார்கள், அதே எண்ணிக்கையிலான அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதில் ரிசாத் பதியூதீன், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ராதாகிருஷ்ணன், ஜீவன் தொண்டமான் உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சரவையில் இடம்பெறுவர் என தெரிவிக்கப்படுகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd