web log free
September 19, 2024

யார் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டை இப்போதைக்கு சரிசெய்ய முடியாது

சர்வதேச ரீதியில் தற்போதைய அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை என சமகி ஜனபலவேகய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

இணைய சேனலுடனான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட அவர், நிலையான அரசியல் அதிகாரம் இல்லாத உண்மையான ஆணையை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கம் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவது அல்லது மீண்டும் பொதுத் தேர்தலை நடத்தி மக்கள் எதிர்பார்க்கும் வகையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு இடமளிப்பது அவசியம் என அவர் குறிப்பிடுகின்றார்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண நீண்ட காலம் பிடிக்கும் என சுட்டிக்காட்டியுள்ள இரான் விக்ரமரத்ன, அதற்காக மக்கள் விரும்பத்தகாத சில தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.