web log free
January 30, 2026

பெத்தும் கெர்னர் விளக்கமறியலில்

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கெர்னர் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திற்கு அருகாமையில் உள்ள பொல்துவ சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மோதல் ஏற்பட காரணமாக இருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd