web log free
April 30, 2025

வீடே இல்லாத என்னை வீட்டுக்குச் செல்லுமாறு போராட்டம் நடத்தி காலத்தை வீணடிக்க வேண்டாம்

ரணில் வீட்டுக்குப் போக வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்திற்குச் சென்றாலும் தனக்கு செல்வதற்கு வீடு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வீடற்றவர் வீட்டிற்கு செல்வதற்காக ஊர்வலம் செல்வதில் அர்த்தமில்லை, எனவே தயவு செய்து இவ்வாறான காரியங்களை செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், கண்டி மாவட்ட முன்னாள் உள்ளூராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஆசன அமைப்பாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

"நீங்கள் தயாராக இருந்தால், ஒரு பெரிய கூட்டத்தை வரவழைக்கவும். ஆறு மாதங்களுக்குள் எனது வீட்டைக் கட்டுங்கள். வீட்டைக் கட்டி, நான் அங்கு சென்ற பிறகு, ரணிலை வீட்டிற்கு செல்லுமாறு கூறி ஆர்ப்பாட்டம் செய்ய வாருங்கள், கிராமத்தைக் கட்டுங்கள், அல்லது எனது வீட்டைக் கட்டுங்கள். அதில் ஒன்றைச் செய்யுங்கள்" என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd