web log free
September 15, 2025

கடல் வழியாக பிரான்ஸ் செல்ல முயற்சித்த 47 பேர் கைது

கடல் வழியாக வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயற்சித்த 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வென்னப்புவ பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலீசார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் நாட்டை நோக்கி செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளதால் பலர் கடல் வழியாக வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல முயற்சித்து வருகின்றமை அதிகரித்துள்ளது.  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd