web log free
November 09, 2025

'மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்துங்கள்'

 

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொட்டாவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் அவர் இதனைக் கூறியுள்ளதுடன், 7 மாகாண சபைகளின் அதிகார காலம் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமல் பிற்போடப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிடுகிறது என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd