web log free
December 12, 2025

பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர கோரிக்கை

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் போது சட்ட ரீதியாக மாத்திரம் விசா பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறில்லை எனில் ஆட்கடத்தல்காரர்களிடம் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருவதாக மக்களின் பணத்தை பெற்று ஏமாற்றும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்த தகவல்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd