web log free
April 29, 2025

அரிசி விலை இரண்டு மடங்கு அதிகரிக்கும் என எச்சரிக்கை

நெல் சந்தைப்படுத்தல் சபை அதிக விலைக்கு நெல் கொள்வனவு செய்தால் அரிசியின் விலை இரட்டிப்பாகும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரிசி ஆலை உரிமையாளர்கள் அமைச்சரிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

நெல் விலையை குறைக்காவிட்டால், அரிசி விலையை பராமரிப்பது கடினம் என்றும்,  அரிசி விலை இருமடங்காக உயரும் எனவும் பெரும்பான்மையான அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

நெல் சந்தைப்படுத்தல் சபையை விட குறைந்த விலைக்கு தனியார் நெல் கொள்முதல் செய்வதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd