web log free
February 05, 2026

சஜித் பிரேமதாசவின் சகோதரி நாட்டில் இருந்து தப்பியோட்டம்

ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வீட்டை எரித்து நாசம் செய்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி ஜயக்கொடி நேற்று (26) நாட்டைவிட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அவர் தனது இரண்டு குழந்தைகளான சஞ்சய் ஜெயக்கொடி மற்றும் அமாயா ஜெயக்கொடி ஆகியோருடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 505 இல் நாட்டை விட்டு வெளியேறினார்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு தீயில் எரிந்து நாசமான சம்பவம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி சனிக்கிழமை துலாஞ்சலி ஜெயக்கொடி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வீடு ஜூலை 9ஆம் திகதி வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டதுடன், பல பெறுமதியான புத்தகங்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

சம்பவத்துடன் துலாஞ்சலி ஜயகொடிக்கு தொடர்பு இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd