web log free
August 22, 2025

பதவியில் இருந்து விலகிய ஜனாதிபதிக்கு வரப்பிரசாதம் கொடுப்பது எப்படி?

தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றை வழங்குவதற்கு சட்ட தடைகள் இருப்பதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலத்தை நிறைவு செய்த ஜனாதிபதியல்ல, பதவியை ராஜினாமா செய்து தனது பொறுப்பில் இருந்து விலகிய ஜனாதிபதி, எனவே அவருக்கு முன்னாள் ஜனாதிபதி சிறப்புரிமைகள் கிடையாது என்ற சட்ட வாதத்தின் அடிப்படையிலேயே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்ததுடன், கோட்டாபய ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படுமாயின் அதனை நீதிமன்றில் சவால் செய்ய நேரிடலாம் எனவே உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், அவர் இலங்கைக்கு வந்தால் அவருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், மிரிஹானவில் உள்ள தனியார் வீட்டை உரிய முறையில் திருத்திக் கொடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd