web log free
April 28, 2025

ராஜபக்ச குடும்ப முக்கியஸ்தருக்கு ரணில் விடுத்த எச்சரிக்கை!

இன்று (08) பதவியேற்ற 37 இராஜாங்க அமைச்சர்களில் ராஜபக்ச குடும்பத்தின் ஒரேயொரு அமைச்சராக இருந்த ஷசீந்திர ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை அல்லது ஆலோசனை வழங்கியுள்ளார்.

நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருந்த சமயத்தில் இது நடந்துள்ளது.

இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி அவருக்கு இராஜாங்க அமைச்சராக நியமனக் கடிதத்தை வழங்கி சில ஆலோசனைகளை வழங்கியதைக் காண முடிந்தது.

அங்கு ஜனாதிபதியின் உரைக்கு இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ சம்மதம் தெரிவித்து “சரி சார் நன்றி” என்று கூறிவிட்டு நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd