web log free
April 28, 2025

வெல்கம - சந்திரிக்கா இணைந்து தீட்டியுள்ள திட்டம்

குமார வெல்கம தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் ஆசன அமைப்பாளர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் நியமனங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.

சந்திரிகா குமாரதுங்க கம்பஹா மாவட்டத்தின் தலைவராகவும், ஜீவன் குமாரதுங்க கொழும்பு மாவட்டத்தின் தலைவராகவும், தான் களுத்துறை மாவட்டத்தின் தலைவராகவும் உள்ளதாக குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அத்தனகல்ல தொகுதி அமைப்பாளராக நியமிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுதவிர பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கட்சியில் இணைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd