web log free
December 09, 2025

ஏ.டி.எம் இயந்திரங்களில் 50 லட்சம் பண மோசடி, சந்தேகநபர் கைது

ஏ. டி. எம். சாவடிகளில் தங்கி, பல்வேறு குழப்பங்களை தோற்றுவித்து அவர்களின் ஏ. டி.எம் அட்டையை மோசடியான முறையில் திருடி ஐம்பது இலட்சம் (50) ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கடுவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட போது, ​​சந்தேக நபரிடம் இருந்து வெவ்வேறு நபர்களுக்கு சொந்தமான 8 வங்கி அட்டைகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.

சந்தேகநபர் கடுவெல அரச வங்கிக்கு அருகில் தங்கியிருந்து சுமார் 40 முறை மக்களை ஏமாற்றி இருபது இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாலம்பே மற்றும் பியகம பிரதேசங்களில் உள்ள தனியார் மற்றும் பொது வங்கி ஏ.டி.எம் மையங்களிலும் சந்தேக நபர் தங்கி பணத்தை ஏமாற்றியதாக பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நீண்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd