web log free
January 12, 2026

நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக வதந்தி

நாட்டில் சில பகுதிகளில் நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd