web log free
June 30, 2026

ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்து பயணம்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (17) ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்லவுள்ளார்.

சனிக்கிழமை அதிகாலை இலங்கையிலிருந்து புறப்படும் ஜனாதிபதி, திங்கட்கிழமை (19) லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் நடைபெறும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்கவுள்ளார்.

இங்கிலாந்தின் மிக நீண்ட காலம் மன்னராக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் 96 வயதில் பால்மோரலில் இறந்தார்.

கடந்த வாரம் (08) தனது ஸ்காட்டிஷ் தோட்டத்தில் கோடை காலத்தின் பெரும்பகுதியை கழித்த அவர் நிம்மதியாக இறந்தார்.

மறைந்த ராணியின் நினைவாக அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை துக்க தினமாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd