web log free
March 28, 2024

கள்ளக் காதலுக்கு மறுப்புத் தெரிவித்த திருமணமான பெண் கொடூரமாகக் குத்திக் கொலை!

தன்னுடன் கள்ளக் காதல் தொடர்பை வைத்துக் கொள்ளுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த இரண்டு பிள்ளைகளின் தாயான முப்பத்தேழு வயது ஆடைத் தொழிலாளியை கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த யோசனையை முன்வைத்த 47 வயதான திருமணமாகாத நபரே இந்தக் கொலையை செய்துள்ளார். 

கொலை செய்துவிட்டு காட்டுக்குள் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக அத்தனகல பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று (21) பிற்பகல் அலவல ஹப்பனகந்த பிரதேசத்தில் வசிக்கும் வத்துப்பிட்டிவல ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் ஆடைத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த முப்பத்தேழு வயதான திருமணமான இரண்டு பிள்ளைகளின் தாயான  என்.எச்.ஆர்.ஷியாமலி ஹப்பனகந்த பகுதியில் வைத்து கத்திக் குத்துக்கு இலக்காகினார். 

பலத்த காயங்களுடன் வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (21) இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம், அத்தனகல்ல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் யசேந்திர நாலக தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் குழு இன்று (22) ஹெபனகந்த பிரதேசத்தில் உள்ள பைன் தோப்பொன்றை சுற்றிவளைத்து சோதனை செய்து அங்கு மறைந்திருந்த கொலையாளியை கைது செய்துள்ளனர்.

கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் போது சந்தேகத்திற்கிடமான கொலையாளி ஆடைத் தொழிலாளிக்கு திருமணத்திற்குப் புறம்பான உறவைப் பேணுமாறு பல தடவைகள் முன்மொழிந்துள்ளதாகவும் அவர் முன்மொழிவை நிராகரித்ததன் காரணமாகவே இந்தக் கொலையை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஆடைத் தொழிலாளி வேலை முடிந்து பஸ்சில் இருந்து இறங்கி வனப்பகுதி வழியாக நடந்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பொலீசார் கண்டுபிடித்தனர்.

கொலையாளி அலவல ஹப்பனகந்த பகுதியைச் சேர்ந்த நாற்பத்தேழு வயதான திருமணமாகாதவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்தனகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.