web log free
May 02, 2026

காலி முகத்திடல் போராட்டக்காரர்களின் புதிய அரசியல் கூட்டணி

காலி முகத்திடல் போராட்டத்தில் தீவிர பங்களிப்பை வழங்கிய போராட்டக்குழுவினர் அரசியலில் பிரவேசிக்க தீர்மானித்துள்ளனர்.

போராட்டத்தின் அடிப்படை நோக்கங்களில் இணக்கம் காணக்கூடிய அனைத்துக் கட்சிகளையும் ஒரே கூட்டணிக்குள் கொண்டு வந்து அந்தக் கூட்டணியின் மூலம் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பரிசோதனையாகவும், வெற்றி பெற்றால், பொதுத் தேர்தல் வரை அந்தக் கூட்டணியைக் கட்டியெழுப்பவும், செயற்பாட்டாளர்கள் குழுவொன்று தீர்மானித்துள்ளது.

இந்த கூட்டணியில் இணைந்து கொள்வதில்லை என ஜே.வி.பி மற்றும் முன்னணி கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், மற்ற கட்சிகளையும், தனி நபர்களையும் ஒன்றிணைத்து, பொதுப் போராட்டத் திட்டத்தைத் தயாரித்து, அரசியலுக்கு வருவது என, ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd