web log free
July 13, 2025

போராட்டத்திற்குச் சென்ற இளைஞர்களுக்கு புனர்வாழ்வு - நாமல் கோரிக்கை

போராட்டத்தில் தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்களை புனர்வாழ்வு வேலைத்திட்டத்தின் மூலம் சமூகத்துடன் இணைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பாவி சிறுவர்கள் இருப்பதாகவும், அவர்களை விளக்கமறியலில் வைத்து காவல் துறை அறிக்கை மூலம் வேலை வாய்ப்பை பறிப்பது தவறு என்று அவர் கூறினார்.

போராட்டத்தில் பங்கேற்க வந்த இளைஞகளை கைது செய்து சிறையில் அடைப்பதால் எந்த பலனும் ஏற்படாது என்றும் அவர் கூறுகிறார்.

வெலிமடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd