web log free
December 02, 2025

ஜனாதிபதியின் விசேட உரை எதிர்வரும் வியாழக்கிழமை

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார்.

பாராளுமன்றத்தில் வைத்து இந்த உரையை நிகழ்த்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய பொருளாதார நிலை மற்றும் சர்வதேச ஆதரவு தொடர்பில் ஜனாதிபதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் விசேடஉரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd