web log free
June 25, 2025

கையில் விலங்கின்றி வெளியே அழைத்து வரப்பட்ட திலினி, சட்டத்தில் தனி சலுகை!

கோடீஸ்வர வர்த்தகர்கள் உட்பட சமூகத்தின் உயர்தர வகுப்பினரை ஏமாற்றி கொழும்பு உலக வர்த்தக நிலையத்தில் அலுவலகம் நடத்தி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட திலினி பிரியமாலி உலக வர்த்தக நிலையத்திற்கு பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டார்.

வழமையாக விளக்கமறியலில் வைக்கப்படும் சந்தேகநபர்கள் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுடன் திலினி பிரியமாலி உலக வர்த்தக நிலையத்திற்கு வந்த போது கைவிலங்கிடப்படாமல் இருந்தமை விசேட அம்சமாகும்.

நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட விசேட உத்தரவின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் அவரை விசாரணைக்காக உலக வர்த்தக நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளது.

மேலதிக விசாரணைக்காக அவர் மேலும் மூன்று இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd