web log free
January 21, 2026

ரணில் - கோட்டா திடீர் சந்திப்பு, அடுத்து நடக்கப்போவது என்ன?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்றது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மொட்டு கட்சியின் ஆதரவைப் பெறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலையீட்டைப் பெறுவதே இந்த சந்திப்பின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த கலந்துரையாடல் 22வது திருத்தம் தொடர்பில் மாத்திரம் பேசப்படவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் எதிர்கால தீர்மானங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இருவருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக பாதுகாப்புத் தலைவர்களின் ஓய்வு மற்றும் புதிய நியமனங்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியதாக அந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd