web log free
June 25, 2025

விலை மாற்றம் ஏற்படும் என்பதால் எரிபொருள் தட்டுப்பாடு

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், ஒவ்வொரு மாதமும் 1ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவுள்ளது.

அதன்படி இன்று (31) அல்லது நாளை (01) திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால் எரிபொருள் விலை குறையும் என்ற நம்பிக்கையில் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை ஆர்டர் செய்வதில் தாமதம் செய்கின்றனர்.

இதன் காரணமாக இன்று (31) முதல் ஹட்டனில் உள்ள சிபெட்கோ மற்றும் ஐஓசி பெற்றோல் நிலையங்களில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஐஓசி பெற்றோல் நிலையத்தின் கையிருப்பில் இருந்து 95 ஒக்டேன் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் பெற்றோல் வாகனங்கள் காணப்பட்டன.

நேற்று (30) பிற்பகல் முதல் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலை காரணமாக 95 ஒக்டேன் எரிபொருளை தமது வாகனங்களுக்கு பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd