web log free
November 15, 2025

சிறிசுமண தேரர் விளக்கமறியலில்

நேற்று குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பொரளை சிறிசுமண தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறிசுமண தேரரை இன்று (02) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் இணைந்து நிதி மோசடியில் ஈடுபட்டதாக பொரளை சிறிசுமண தேரர் நேற்று (01) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd