web log free
April 26, 2025

டுபாயில் இருந்து வந்த 20 வயது இளைஞனுக்கு குரங்கு அம்மை நோய்!

இலங்கையில் முதன்முறையாக குரங்கு அம்மை நோய்த்தொற்று 20 வயதுடைய நபரிடம் கண்டறியப்பட்டுள்ளது.

நவம்பர் 1 ஆம் திகதி டுபாயில் இருந்து வந்த 20 வயதுடைய இளைஞன் முதல் நோயாளி என அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை என்பது ஒரு வைரஸ் ஜூனோசிஸ் (விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ்) ஆகும், இது மருத்துவரீதியாக குறைவான தீவிரத்தன்மை கொண்டதாக இருந்தாலும், பெரியம்மை நோயாளிகளிடம் கடந்த காலத்தில் காணப்பட்ட அறிகுறிகளைப் போன்றது.

1980 இல் பெரியம்மை ஒழிப்பு மற்றும் பெரியம்மை தடுப்பூசி நிறுத்தப்பட்டதன் மூலம், குரங்கு அம்மை பொது சுகாதாரத்திற்கான மிக முக்கியமான ஆர்த்தோபாக்ஸ் வைரஸாக உருவெடுத்துள்ளது.

குரங்கு அம்மை முக்கியமாக மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் ஏற்படுகிறது, பெரும்பாலும் வெப்பமண்டல மழைக்காடுகளுக்கு அருகாமையில், நகர்ப்புறங்களில் பெருகிய முறையில் தோன்றும். விலங்கு புரவலர்களில் கொறித்துண்ணிகள் மற்றும் மனிதரல்லாத விலங்குகள் அடங்கும். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd