web log free
September 04, 2025

மகிந்த தேசப்பிரிய மீண்டும் முக்கிய பதவியில்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதேச எல்லை நிர்ணயத்திற்கான தேசிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான குழுவை பிரதமர் தினேஷ் குணவர்தன நியமித்துள்ளதாகவும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையிலான குறித்த குழுவிற்கு நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் ஏனைய உறுப்பினர்களான ஜயலத் திஸாநாயக்க, டபிள்யூ.எம்.எம்.ஆர்.அதிகாரி, கே. தவலிங்கம் மற்றும் ஐ.ஏ.ஹமீட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd