web log free
December 04, 2025

பாராளுமன்றத்திற்கு வருகை தரும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு குவளை பால் இலவசம்

பாராளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிட வரும் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு கிளாஸ் பால் வழங்க பாராளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.

இந்த பிரேரணையை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கு குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

நாளொன்றுக்கு அதிகபட்சமாக 500 குழந்தைகளுக்கு ஒரு குவளை பால் இலவசமாக வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் தொடர்பான குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd