web log free
December 07, 2025

மயங்கி விழுந்த மாணவிகள் வைத்தியசாலையில்

வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட மாத்தளை சுஜாதா மகளிர் கல்லூரி மாணவிகள் 42 பேர் நேற்று (15) காலை திடீர் சுகவீனம் காரணமாக மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட சிறுமிகளை வரவேற்கும் நிகழ்வின் போது இந்த சிறுமிகள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

விழாவின் போது மயங்கி விழுந்து சிறுமிகளும் தங்களுக்கு வயிற்றில் பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளனர்.

இந்த நோய்க்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிகளின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd