web log free
December 10, 2025

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

வவுனியா – செட்டிக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற கிணறொன்றுக்குள் வீழ்ந்து 09 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டிற்கு அருகில் வெட்டப்பட்டிருந்த கிணற்றில் நீர் நிரம்பி காணப்பட்டுள்ளதுடன், குறித்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து, மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் செட்டிக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd