web log free
April 23, 2024

வெளிநாட்டுக்கு பெண்களை ஆட்கடத்தல் செய்த நபர் விளக்கமறியலில்

பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி ஆள் கடத்தல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

டுபாய் மற்றும் ஓமானுக்கு மனித கடத்தலில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர் என அடையாளம் காணப்பட்டவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (19) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.