web log free
July 09, 2025

மெட்டியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு

இன்று (21) மெட்டியகொட நமிமியாவ பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தற்போது பலப்பிட்டிய வைத்தியசாலையின் முதலாம் வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக மெட்டியகொட பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பலபிட்டிய வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக கைது செய்யப் போகும் போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd