web log free
October 18, 2024

'சோதனை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை'

 

பயங்கரவாதிகளுடன் தமக்கு எந்தவித தொடர்புகளும் இல்லை எனவும், பயங்கரவாதத்துக்கு தான் உதவி செய்யவில்லை என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுகாதார அமைச்சர் அழுத்தம் வழங்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், தான் எந்தவொரு அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Monday, 09 September 2019 02:26