web log free
September 18, 2025

விரைவில் அதிகாரத்தை கைப்பற்றப் போகும் சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக வருவார் என புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்த போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்டர்கள் குழு நீக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd