web log free
June 30, 2025

பிணையில் வெளியே வந்த தேரர் மீண்டும் விளக்கமறியலில்

பிணையில் விடுவிக்கப்பட்ட கல்வெவ சிறிதம்ம தேரரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றுமொரு வழக்குக்காக கல்வெவ சிறிதம்ம தேரை கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, கல்வெவ சிறிதம்ம தேரர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd