web log free
August 18, 2025

மொட்டுக் கட்சியின் தோல்வி உறுதி என்பதால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை கைப்பற்ற  ராஜபக்ஷக்கள் சதி! 

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து தேர்தலில் போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எனவே அவர்களுக்கு வேறொரு கட்சி தேவை எனவும் அதற்கு இலகுவான கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, கட்சியை நேசிக்கும் அனைவரையும் உதைத்து கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் இருப்பதாகவும் குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தான் இருந்தால் அது சாத்தியமாகாது என்பதை  அவர்கள் தெரிந்து வைத்திருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ராஜபக்சக்களுக்கு வழங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்து ராஜபக்ச சுதந்திரக் கட்சியை நிறுவும் திட்டம் ராஜபக்சக்களிடம் இருந்ததாகவும், திருடும், முக்கிய அரசியல் செய்யாத, கால் நக்கும் நபர்களைக் கொண்ட கட்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd