web log free
April 24, 2024

போராட்டம் செய்ய அஞ்ச வேண்டாம் - உசுப்பேத்தும் பொன்சேகா!

கொழும்பில் செய்ய முடியாவிட்டால்,  கோல்பேஸ் மைதானத்தில் அடக்கினால், கிராமங்களுக்குச் சென்று போராட்டம் நடத்துமாறு போராட்டக்காரர்களிடம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்களின் செலவின தலைப்புகள் மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போது பொன்சேகா இதனைத் தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் போராட்டத்திற்கு மிகவும் அஞ்சுவதாகவும், அரசியலற்ற போராட்டத்தின் மூலமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.