web log free
September 03, 2025

மொட்டுக்குள் தொடரும் முறுகல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள் தொடர்பில் அக்கட்சியின் மற்றுமொரு குழுவினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் கட்சியின் கலந்துரையாடல்களில் கட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பான ஆலோசனைகளை முன்வைக்க இந்தக் குழு தயாராக உள்ளதாக அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அந்த யோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், வேறு மாற்று நடவடிக்கையை மேற்கொள்வதற்கான கலந்துரையாடலை இந்தக் குழு ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழுவில் அரசாங்கத்தின் சில சிரேஷ்ட அமைச்சர்களும் இளைஞர் அமைச்சர்கள் குழுவும் உள்ளதாக அறியப்படுகிறது.

அரசாங்கத்தில் முக்கிய பதவி வகிக்கும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரும் இவர்களில் உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd