web log free
May 06, 2026

நாடளாவிய ரீதியில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் பால்மாக்களின் விலைகளையும் அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மில்க்ரோ நிறுவனம் 400 கிராம் பால்மா பொதியின் விலையை, 470 ரூபாய் வரையில் அதிகரிக்க அவதானம் செலுத்தியுள்ளது.

எனினும் இதுதொடர்பில், இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதேநேரம், பெல்வத்த நிறுவனம் 380 ரூபாவாக இருந்த 400 கிராம் பால்மா பொதியின் விலை 460 ரூபாயென நிர்ணயம் செய்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பையே தாங்கிக்கொள்ள முடியாமல் திண்டாடும் மக்களுக்கு உள்ளூர் பால்மாவின் விலையும் அதிகரிப்பு என்ற செய்தி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இன்று முதல் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா புதிய விலையுடன் சந்தைக்கு வெளியிடப்படும் என்று பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் புதிய விலையில் ஒரு கிலோ பால் மா 1,195 ரூபாய்க்கும் 400 கிராம் பால் மா 480 ரூபாய்க்கும் வெளியிடப்படும் என்று இறக்குமதியாளர்கள் சங்க உறுப்பினர் லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்தார்

இதேவேளை, இன்று முதல் பால் மா பற்றாக்குறையின்றி மொத்த சந்தைக்கு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd