web log free
September 11, 2025

பொலித்தீன் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் சுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கிய காரணம் என அவர்கள் கூறியுள்ளனர்.

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றன. இதனால் மக்கள் குறித்த பொருட்களை பெற்றுக்கொள்ள பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலையில், பொலித்தீன் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd