web log free
December 15, 2025

நாட்டின் பல பகுதிகளில் மண்ணெண்ணை கொள்வனவு செய்வதற்கு மக்கள் இன்றும் (03) நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

இதன்படி ,பல பகுதிகளில் மண்ணெண்ணை தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

மின்சார ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளமையினால், மின்சாரம் தடைப்படும் என வெளியான தகவல்களின் பின்னரே, மக்கள் மண்ணெண்ணை கொள்வனவு செய்ய நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

மேலும் ,எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மின்சாரம் தடைப்படாது எனவும், அவ்வாறு மின் தடை ஏற்பட்டால் அதனை விரைந்து வழமைக்கு கொண்டு வருவதாகவும் மின்சார சபைத் தலைவர் நேற்று உறுதியளித்திருந்தார்.

நாளை முதல் சமையல் எரிவாயு பற்றாகுறை தீர்க்கப்படும் என கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார்.

லிட்ரோ கேஸ் நிறுவனம் தற்சமயம் பழைய விலையிலும் லாfப் கேஸ் நிறுவனம் அதன் புதிய விலையிலும் எரிவாயுவினை விற்பனை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd