web log free
May 17, 2024

இன்று கொழும்பில் 21 கம்பஹாவில் 26 களுத்துறையில் 24 குருநாகலில் 9 புத்தளத்தில் 2 நுவரெலியாவில் 7 மாத்தளையில் 1 பதுளையில் 14 மொனராகலவில் 12 காலியில் 4 மாத்தறையில் 9 ஹம்பந்தொடவில் 12 ரத்தினபுரியில் 3 கேகாலவில் 5 அநுராதபுரத்தில் 8 யாழ்பாணத்தில் 40 கிளிநொச்சியில் 4 முல்லைதீவில் 3 மன்னாரில் 3 வவுனியாவில் 12 திருகோணமலையில் 16 மட்டக்களப்பில் 31 மற்றும் அம்பாறையில் 27 என நாடு முழுவதும் 297 தடுப்பூசி மையங்கள் செயற்பட்டவண்ணம் இருப்பதாக சுகாதார வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மொத்தமாக 147114 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தகவல் வழங்கியுள்ளது. 

இந்நிலையில் மொடோனா தடுப்பூசியின் 1வது டோஸ் 30 பேருக்கும் 2வது டோஸ் 1815 பேருக்கும் வழங்கப்பட்ட நிலையில் சைனபார்ம் தடுப்பூசியின் 1வது டோஸ் 51798 பேருக்கும் 2வது டோஸ் 88700 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதே போல் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசியின் 1வது டோஸ் 3194 பேருக்கும் 2வது டோஸ் 839 பேருக்கும் பைசர் தடுப்பூசியின் 1வது டோஸ் 353 பேருக்கும் 2வது டோஸ் 385 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (5) பிற்பகல் முதல் நுவரெலியா தோட்டத்தில் விறகு சேகரிக்கும் போது காணாமல் போன 25 வயது பெண் ஒருவர் இராணுவப் படையினர், காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

ஜே பாலன் கத்முனா தரணி ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது தாயுடன் நுவரெலியா எஸ்டேட்டில் விறகு சேகரிக்கச் சென்றார், அன்றிலிருந்து காணாமல் போனார்.

தகவலறிந்து இந்த ஒருங்கினைப்பு சிறப்பு தேடல் நடவடிக்கை சில மணிநேரங்களுக்குள் தொடங்கப்பட்டது. கடந்த 4 நாட்களில் தேடுதல் குழு உறுப்பினர்கள் பணியில் தோட்டத் தொழிலாளர்கள் அளித்த ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன் தேடுதல் தொடர்ந்து சென்றது.

அப்பகுதியில் அடர்ந்த காடும் மோசமான வானிலையும் இருந்த போதிலும் தேடும் குழுக்கள் அவளை தேடும் பணியை கைவிடாது அவளை முற்றிலும் உடல் நீரிழந்த நிலையில் தரையில் கிடந்திருக்கையில் கண்டுப்பிடித்தனர்.

நேற்று (9) மாலை சுமார் 6.30 மணியளவில் கண்டுப்பிடிக்கப்பட்டார். அவர் உடனடியாக நுவரெலியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.