web log free
May 17, 2024

இன்று கொழும்பில் 21 கம்பஹாவில் 26 களுத்துறையில் 24 குருநாகலில் 9 புத்தளத்தில் 2 நுவரெலியாவில் 7 மாத்தளையில் 1 பதுளையில் 14 மொனராகலவில் 12 காலியில் 4 மாத்தறையில் 9 ஹம்பந்தொடவில் 12 ரத்தினபுரியில் 3 கேகாலவில் 5 அநுராதபுரத்தில் 8 யாழ்பாணத்தில் 40 கிளிநொச்சியில் 4 முல்லைதீவில் 3 மன்னாரில் 3 வவுனியாவில் 12 திருகோணமலையில் 16 மட்டக்களப்பில் 31 மற்றும் அம்பாறையில் 27 என நாடு முழுவதும் 297 தடுப்பூசி மையங்கள் செயற்பட்டவண்ணம் இருப்பதாக சுகாதார வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மொத்தமாக 147114 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தகவல் வழங்கியுள்ளது. 

இந்நிலையில் மொடோனா தடுப்பூசியின் 1வது டோஸ் 30 பேருக்கும் 2வது டோஸ் 1815 பேருக்கும் வழங்கப்பட்ட நிலையில் சைனபார்ம் தடுப்பூசியின் 1வது டோஸ் 51798 பேருக்கும் 2வது டோஸ் 88700 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதே போல் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசியின் 1வது டோஸ் 3194 பேருக்கும் 2வது டோஸ் 839 பேருக்கும் பைசர் தடுப்பூசியின் 1வது டோஸ் 353 பேருக்கும் 2வது டோஸ் 385 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட ‘ஃபைசர்’ தடுப்பூசியை நாட்டில் 12 -18 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்க சுகாதார அமைச்சரின் கோரிக்கைக்கு அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நேற்று ஒப்புதல் அளித்ததாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ கூறினார்.

12 -18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ‘ஃபைசர்’ தடுப்பூசி வழங்குவதன் மூலம், கொரோனா சிக்கல்கள் மற்றும் இறப்புகளை தடுக்க முடியும் என்று தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும், கொவிட் ஒழிப்புக்குழுவின் ஒப்புதலுடன், கூடிய விரைவில் தடுப்பூசியை போடத் தொடங்குவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.