web log free
April 19, 2025

இலங்கையில் நடைபெறவுள்ள எல்.பி.எல் போட்டிகளில் ரோஹித்த ராஜபக்ஸ பங்குபற்றவுள்ளார் என செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், கிரிக்கெட் விளையாட்டிற்குள் தான் பிரவேசிக்கவுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்திற்குள் செல்வதற்கோ அல்லது லங்கா பிரிமீயர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கோ தனக்கு ஆர்வம் கிடையாது என அவரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd