web log free
July 27, 2025
இலங்கை மக்களுக்கு மூன்நாவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையின் முதலாவதாக முன்னிலை சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பூஸ்டர் தடுப்பூசியாக ´பைஸர்´ தடுப்பூசியே செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 

மையங்கனை பகுதியில் ஆதிவாசிகளின் கிராமத்தில் கடந்த மாதம் 27 திகதி 115 பேருக்கு எடுக்கப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையின் போது 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அந்நிலையில் ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னில எத்தனின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் மையங்கனை கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் பொழுது நேற்று அவர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உயிரிழந்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd